Saturday, December 18, 2010

பிறை 14 ராத்திபு
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் முஹர்ரம் மாத 14 பிறை ராத்திபு ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பிறை 1 முதல் 1௦ வரை இமாம் ஹஸன் (ரலி ) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களுடைய மவ்லிது சரீஃப் சபைப் பிள்ளைகளின் இல்லங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஹுசைன்(ரலி) அவர்களின் கந்துாரி ‌கொண்டாடும் விதமாக ராத்திபு மஜ்லிஸை தொடர்ந்து ஆஷூரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு அ.முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஆத்ம சகோதரர் K.ஷபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்களின் மகன் ச.முஹம்மது உமர் கிராஅத் ஓதினார். நபிப்புகழ்பாவை ஆத்ம சகோதரர் ஜாஃபர் சாதிக் ஹக்கிய்யுள் காதிரி இனிமையாக பாடினார். வஹ்தத்துல் வுஜூது பாடலை ஆத்ம சகோதரர் தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் ஆத்ம சகோதரர் மு.முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி பாடினார்கள். பேச்சாளர்களின் முதலாவதாக ஆத்ம சகோதரர் ஜ.அப்துல் அஜுஸ் உலவி,ஹக்கிய்யுள் காதிரி இமாம் ஹஸன் (ரலி) மற்றும் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் மவ்லிது சரீஃப்ல் உள்ள ஹிகயாதுள் இருந்து சிலவற்றை ‌விளக்கினார். அதை தொடர்ந்து இமாம் ஹஸன் (ரலி) இமாம் ஹுசைன் (ரலி) புகழ்பாடலை அமானுல்லாஹ் ஹக்கியுல்காதிரி மற்றும் அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி (பாகவி) பாடினார்கள். அடுத்ததாக ஆத்ம சகோதரர் அ.முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி கர்பலாவிற்கான காரணங்களும் போரின் நிகழ்வுகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



இறுதியாக தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் நன்றியுரை நல்கினார்.

தவ்பா பைத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Friday, December 10, 2010

வாழ்த்துக்கள்


சங்கைமிகு இமாம் ஜமாலிய்யா அஸ்சையது கலீல் அவுன்அல்ஹஸனியுல் ஹாஷிமி நாயகம் அவர்கள் தங்களின் திருஇல்லத்தில் துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகத் தலைவர் A.P.சிஹாபுதீன் B.E., M.B.A ஹக்கியுல்காதிரி அவர்களை தங்களின் கலீபாவாக நியமித்துள்ளார்கள்.

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரியபடுத்தி கொள்கின்றோம் .

Saturday, November 20, 2010

இராத்திபத்துல் காதிரிய்யா

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் நவம்பர் 19 வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 இராத்திபு ஆத்ம சகோதரர் முபாரக் அலி, நத்ஹர்ஷா மற்றும் முகம்மது மீரான் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. முகம்மது மீரான் ஹக்கியுல்காதிரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஷம்சுத்தீன் ஹக்கியுல்காதிரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி (பாகவி) மற்றும் முபாரக் அலி ஹக்கியுல்காதிரி பாடினார்கள். கண்மணி நாயகம் (ஸல் அலை) புகழ்பாடலை அமானுல்லாஹ் ஹக்கியுல்காதிரி அவர்கள் மற்றும் ஏகாந்தப் பாடலை ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசீனி ஹக்கியுல்காதிரி மற்றும் முகம்மது MCA ஹக்கியுல்காதிரி பாடினார்கள். அதை தொடர்ந்து முதலாவதாக ஜாபார் அலி யாசீனி ஹக்கியுல்காதிரி குர்பானி உடைய சிறப்பை பற்றியும் அடுத்ததாக முகம்மது ஹாஷிம் ஹக்கியுல்காதிரி குருவின் அவசியம் பற்றியும் அடுத்ததாக ஜாபார் சாதிக் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பை பற்றியும் முகம்மது மீரான் ஹக்கியுல்காதிரி முடிவுரை நிகழ்த்தினார்கள் மேலும் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இறுதியாக தவ்பா பைத்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

சபை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். அனைவருக்கும் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Tuesday, November 16, 2010

Saturday, October 30, 2010



சங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தினம்

குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை(29.10.2010) மஃரிப் தொழுகைக்குப் பின் குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் புனித விசால் தினத்தில் கசிதா ஓதியபின் கந்தூரிவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நிர்வாகத்தலைவர் அப்துல் ஹமீது(பாகவி)ஹக்கியுல்காதிரி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியின் ஆரம்பமாக முபாரக் அலி ஹக்கியுல்காதிரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள் அவர்களைத் தொடர்ந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை ஆத்ம சகோதரர் மீரான் ஹக்கியுல்காதிரி மற்றும் அப்துல் ஹமீது(பாகவி) ஹக்கியுல்காதிரி பாடினார்கள் கண்மணி நாயகம் (ஸல் அலை) புகழ்பாடலை முபாரக் அலி ஹக்கியுல்காதிரி அவர்கள் மற்றும் ஞானப்பாடலை ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது(பாகவி),ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ் , ஆத்ம சகோதரர் முஹம்மது MCA பாடினார்கள்.

அதைத் தொடர்ந்து ஆத்ம சகோதரர் முஹம்மது MCA மற்றும் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது(பாகவி) உரையாற்றினார்கள், இவ்விழா ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது

இவ்விழாவில் சபை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன .

Sunday, October 24, 2010

இராத்திபத்துல் காதிரிய்யா

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் ஜமாதுல் அவ்வல் பிறை 14 ராத்திப் வெள்ளி மஃரிப் தொழுகைக்குப் பின் இராத்திபத்துல் காதிரியா ஓதப்பட்டது அதன் பின் குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் விசால் தினத்தினை நினைவு கூறும்பொருட்டு அவர்களுக்காக கசீதாவும் ஒதப்பட்டது. இந்நிகழ்ச்சி ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது,நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன

Sunday, September 26, 2010

குவைதில் உதயதின விழா



குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் செப்டம்பர் 24 வெள்ளிக்கிழமை மாலை மக்ஹ்ரிப் பிறகு இராத்திபத்துல் காதிரியா ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கியுல்காதிரி அவர்கள் இல்லத்தில் ஓதப்பட்டது.




அதை தொடர்ந்து சங்கைமிகு குத்புஜ் ஜமான் ஷம்சுல் வுஜுத் அஷ்ஷெய்கு ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா அல் காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹுசைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் எழில்மிகு 75வது உதயதின விழா ஆரம்பமானது. நிர்வாகத்தலைவர் அப்துல் ஹமீது பாகவி ஹக்கியுல்காதிரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக முபாரக் அலி ஹக்கியுல்காதிரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கினார்கள்.

அவர்களைத் தொடந்து வஹ்தத்துல் வுஜூதுபாடலை ஜபார் அலி யாசீனி ஹக்கியுல்காதிரி பாடினார்.

கண்மணி நாயகம் (ஸல் அலை) புகழ்பாடலை முபாரக் அலி ஹக்கியுல்காதிரி அவர்கள் மற்றும் ஞானப்பாடலை ஆத்ம சகோதரர் Er.ஹிதயாத்துலாஹ் பாடினார்கள்.



விழாத்தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார்




அதைத் தொடந்து ஆத்ம சகோதரர் மீரான் ஹக்கியுல்காதிரி மிக அழகாக உரையாடினார்கள்



ஜாபர் அலி யாசீனி ஹக்கியுல்காதிரி அவர்கள் முடிவுரை நிகழ்த்தினார்கள்.



அதன் பிறுகு கஸிதத்துல் அவ்னியா ஓதப்பட்டது



இறுதியாக விழாத்தலைவர் நன்றி உரை நல்கினார்.



இவ்விழாவில் சபை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சிக்குபின் தப்ருக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டன .