Saturday, April 16, 2011

15 .4 .2011 வெள்ளி மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா ராத்திபு மஜ்லிஸ் நடைபெற்றது. சங்கைமிகு வாப்பா நாயகம் அவர்கள் தலைமை ஏற்று ஓதி நடத்திய இந்த பேரின்ப மஜ்லிஸில் முரீதீன்கள் அஹ்பாப்கள் மற்றும் துபாய் ஏகத்துவ மெய்ஞான சபைத் தலைவர் கலீபா A.P. சஹாபுத்தீன் B.E.,M.B.A., மற்றும் இந்தியாவின் தமிழகத்தில் இருந்து வந்திருந்த கலீபா ஆலிம் புலவர் S. ஹுஸைன் முஹம்மது மன்பஈ மற்றும் துபையைச் சேர்ந்த காதிமுஷ்ஷைகு M. அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமும் ஸுபுஹ் தொழுகைக்குப்பின்னும் மக்ரிப் தொழுகைக்குப்பின்னும் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் ஞான விளக்க மஜ்லிஸ் நடைபெற்று வருகிறது.

Friday, April 15, 2011

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் அருள் வருகை!

தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் காமில் ஷைகு, மெய்ஞான ஜோதி, குத்புஸ்ஸமான், ஷம்ஸுல் வுஜூத், இமாம் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் 14 .4 .2011 வியாழன் மாலை 6 மணியளவில் குவைத்துக்கு மூன்றாவது வருட விஜயமாக வருகை புரிந்தார்கள்.

சங்கைமிகு ஷைகுநாயகம் அவர்களை குவைத் ஏகத்துவ மெய்ஞான சபைத் தலைவர் M. அப்துல் ஹமீத் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் தலைமையில் விமான நிலையம் சென்று சபை உறுப்பினர்கள், முரீதீன்கள், அஹ்பாப்கள் மிக்க ஆவலுடன் வரவேற்றனர். ஏகத்துவ மெய்ஞான சபைக்கு வருகை புரிந்த சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களை முரீத்கள் மிக்க உற்சாகத்துடன் யாநபியல்லாஹ் பைத்தைப் பாடி சந்தன மாலைகள் அணிவித்து அழகிய மலர்ச்செண்டு அளித்து வரவேற்றனர்.

Sunday, April 10, 2011

அப்பா நாயகம் (ரலி) அவர்களின் கந்தூரிப் பெருவிழா!!!

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 08/04/2011 வெள்ளிகிழமை மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் சங்கைக்குரிய நமது செய்கு நாயகத்தின் பாட்டனார், பாம்பு மௌலானா என்று சம்பை வாழ் மக்களால் அழைக்கப்பட்ட செய்கு ஜமாலிய்யா செய்யிது முஹம்மது மௌலானா அல்ஹஸனியுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களின் 62வது புனித கந்தூரி விழாவை முன்னிட்டு இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முரிதீன்கள் கலந்து சிறப்பித்தார்கள். நிர்வாகத் தலைவர் மு.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி உரைநிகழ்த்தினார் நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Monday, April 4, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :ألا ترى إلى قراضة الذهب متفرقة مبتذلة متداولة غادية رائحة في أيدي العطارين والبقالين والقصابين والدباغين والنقاطين والكناسين والكفافين أصحاب الصنائع النفيسة والرذيلة الدنية الخبيثة، ثم تجمع فتجعل في كير الصائغ فتذوب هناك بإشعال النار عليها، ثم تخرج منه فتطرق وترقق وتطلع وتصاك فتجعل حلياً، ثم تجلى وتطيب فتترك في خير المواضع والأمكنة من وراء الأغلاق في الخزائن والصناديق والأحقاق وتحلى بها العروس وتزين وتكرم، وقد تكون العروس للملك الأعظم فتنقل القراضة من هذه إلى قرب الملك ومجلسه بعد السبك والدق، هكذا أنت يا مؤمن إذا صبرت على مجاري الأقدار فيك ورضيت بالقضاء في جميع الأحوال قربت إلى مولاك عزَّ وجلَّ في الدنيا، فتنعم بالمعرفة والعلوم والأسرار"

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: பல தினுசுகளான பொன் நாணயங்கள் காலையில் இருந்து மாலைவரை, மருந்துக் கடைக்காரர் தொட்டு, காய்கறிக் கடைக்காரர்வரை, கசாப்புக் கடைக்காரர் தொட்டு செம்மான் வரை, பல சரக்குக் கடைக்காரர் தொட்டு தோட்டிவரை சகல தொழிலுடைய ஜனங்களிடம் கைமாறிக் கொண்டே இருக்கின்றன. இவர்களில் சிலர் மிக உயர்ந்த அந்தஸ்தினர்; சிலர் தாழ்வாகக் கருதப்படுபவர்கள். பிறகு இந்தத் தங்க நாணயங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, உருக்கப்பட்டு, கம்பி இழுக்கப்பட்டு, தகடாகப்பட்டு ஆபரணங்களாகச் சமைக்கப்படுகின்றன. அவை பளபளப்பாக்கப்பட்டுப் பரிமளமும் பூசப்படுகின்றன. பிறகு அவை உயரிய அந்தஸ்துள்ள இடங்களில் குடி புகுகின்றன. பொக்கிஷ அறையில் பூட்டப்படுகின்றன. அல்லது ஒரு மணப்பெண்ணை அலங்கரிக்கின்றன. ஒருவேளை இந்த மணப்பெண், பெரிய அரசனின் மகளாகவும் இருக்கலாம். இவ்விதமாகத் தங்கம் செம்மானிடம் இருந்து - உருக்கி, நசுக்கப்பட்டபின் - அரசனின் சந்ததிக்கே போய் விடிகிறது. ஓ மெய்விஸ்வாசியே, இது போலவே விதிவசத்தின் அமலுக்கு உட்படுகையில் பொறுமை காட்டி, வாழ்க்கையின் சகலவித நிலைமைகளிலும் அவன் கட்டளைகளுக்கு உளப்பூர்வமாக உடன்பட்டு வந்தால் இம்மையிலேயே நீ உன் இறைவனுக்கு அருகிலாக்கப்பட்டு, அவனைப் பற்றிய ஞானம் அளிக்கப்பட்டவனாவாய்.

அன்பிற்கினிய சகோதரர்களே, குதுபு நாயகம் அவர்களின் உபதேசங்களில் இருந்து சிலவற்றை அவர்களின் நினைவு மாதமான ரபீஉல் ஆகிர் முழுவதும் வெளியிட்டோம். இதுவரை வெளியிட்டதிலிருந்து நாம் எத்தனையோ விசயங்களை கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதை நம் வாழ்க்கையில் எடுத்து நடந்து நம்மை நாமே சீர்படித்திக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. இதே போன்று இனி வருகின்ற காலங்களிலும் அவ்வப்போது குதுபு நாயகம் அவர்களின் உபதேசங்களை வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ் தொடரும்!!!!!

Sunday, April 3, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :فكم من نعمة عندك وأنت لا تعرفها؟؟ لا تسكن إلى أحد من الخلق, ولا تستأنس به, ولا تطلع أحداً على ما أنت فيه, بل يكون أنسك بالله عزَّ وجلَّ، وسكونك إليه وشكواك منه وإليه لا ترى ثانياً, فإنه ليس لأحد ضر ونفع, ولا جلب ولا دفع, ولا عزَّ ولا ذل, ولا رفع ولا خفض, ولا فقر ولا غنى, ولا تحريك ولا تسكين, الأشياء كلها خلق الله عزَّ وجلَّ وبيد الله عزَّ وجلَّ، بأمره وإذنه جريناها, وكل يجري لأجل مسمى, وكل شيء عنده بمقدار, لا مقدم لما أخر, ولا مؤخر لما قدم"

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: உன்னிடம் அவன் அருட்கொடைகள் எத்தனை இருக்கின்றன, ஆனால், நீ அவற்றை உணர்வதில்லை. சிருஷ்டிகளிலுள்ள எதனாலும் நீ ஆறுதல் பெற்றவனாக ஆகி விடாதே; அவற்றில் பற்றுதல் வையாதே, உன் நிலையை யாரிடமும் சொல்லவும் வேண்டாம், சர்வ புகழுக்கும் சக்திக்கும் உரிமையாளனான அல்லாஹ்விடமே நீ பற்றுதல் கொள்ள வேண்டும்; அவனிடமே ஆறுதல் தேட வேண்டும்; அவன் மீது நீ கொண்டுள்ள குறைபாடுகளை அவனிடமே தெரிவி. வேறு யாரையும் நீ எதிர்நோக்க வேண்டாம், ஏனெனில், வேறு எதிலும் நல்லது-கெட்டது, கைப்பற்றல்-கைவிடல், கௌரவம்-அகௌரவம், ஏற்றம்-இறக்கம், வறுமை-வளம், அசைவு-ஸ்தம்பிதம் ஆகியவை இல்லை. யாவுமே அல்லாஹ்வால் சிருஷ்டிக்கப்பட்டவை; இவற்றின் இயக்கம், அவன் உத்தரவையும் அனுமதியையும் கொண்டு நடப்பதாய், அவன் கைக்குள் அடங்கியதுதான். அவன் குறித்துள்ள காலம்வரை அவை இயங்கும். அவன் நிர்ணயித்து உள்ள கால அளவு வரையே யாவும் தரிப்பட்டிருக்கும். அவன் முன்னரேயே செய்தவை முன்பே உள்ளவை என்றோ, பின்பு செய்தவை பின் உண்டானவை என்றோ கூறிவிட முடியாது. உனக்கு ஏதாவது சங்கடம் உண்டாக்க அல்லாஹ் நாடுவானேயாயின், அவனைத் தவிர வேறு யாராலும் அதைத்தடுக்க முடியாது. அவன் நன்மை செய்ய நாடுவானாயினும் அதையும் யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது.

Saturday, April 2, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :لا تدع حالة القوم يا صاحب الهوى أنت تعبد الهوى وهم عبيد المولى, أنت رغبتك في الدنيا ورغبة القوم في العقبى, أنت ترى الدنيا وهم يرون ربّ الأرض والسماء, وأنت أنسك بالخلق وأنس القوم بالحق، أنت قلبك متعلق بمن في الأرض وقلوب القوم بربّ العرش, أنت يصطادك من ترى وهم لا يرون من ترى بل يرون خالق الأشياء وما يرى, فاز القوم به وحصلت لهم النجاة, وبقيت أنت مرتهناً بما تشتهي من الدنيا وتهوى، فنوا عن الخلق والهوى والإرادة والمنى فوصلوا إلى الملك الأعلى"

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: ஓ, புலன் நுகர்ச்சியின் அடிமையே, அல்லாஹ்வின் அடியார்களின் ஸ்தானத்தை நீ வேட்காதே; நீ உன் புலன் நுகர்சிக்குச் சேவை செய்கிறாய்; அவர்களோ அல்லாஹ்வைத் தொழுதேத்துபவர்கள், உன் ஆசையோ இவ்வுலகின்மீது; அவர்கள் ஆசையோ வரப்போகிற உலகின்மீதுதான். நீ இவ்வுலகைக் காண்கிறாய்; அவர்கள் காண்பதோ இப்பூமிக்கும் வானத்துக்கும் உரிய இறைவனையாகும். உன் சுகம் சிருஷ்டிகளிடம் இருக்கிறது; அவர்கள் சுகமோ அல்லாஹ்விடமுள்ளது. உன் இதயம் இப்பூமியில் உள்ள பொருள்களால் பந்தப் பட்டுள்ளது. அவர்கள் உள்ளங்களோ அல்லாஹ்வின் ஆட்சி பீடத்தே பந்தப்பட்டுள்ளன. நீ கண்டதை காட்சி என்றெண்ணி அதற்குப் பலியாகிறாய்; அவர்களோ நீ காண்பவற்றைக் காணார்கள்; ஆனால், (இக்கண்களால்) காணமுடியாத ரட்சகனையே காண்கிறார்கள். நீ இவ்வுலக இச்சைகளுக்கு இரையாகிக் கிடந்து உழல்கிறாய்; அவர்களோ தம் வாழ்க்கை லட்சியத்தை எய்துகிறார்கள்; தங்களுக்கு ஈடேற்றத்தைத் தேடிக் கொள்கிறார்கள்.

Friday, April 1, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه :إنما هو الله ونفسك وأنت المخاطب، والنفس ضد الله وعدوه, والأشياء كلها تابعة لله, والنفس له خلقاً ومُلكاً, وللنفس ادعاء وتمن وشهوت ولذة بملابستها, فإذا وافقت الحق عزَّ وجلَّ في مخالفة النفس وعدوانها فكنت لله خصماً على نفسك كما قال الله عزَّ وجلَّ لداود عليه السلام : "يا داود أنا بدك اللازم فألزم بدك، العبودية أن تكون خصماً على نفسك"

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: நிச்சயமாக, அல்லாஹ்வும் உன் கீழான மனமும் தவிர வேறு எதுவுமே இல்லை. நீ அல்லாஹ்விடம் முறையிடுபவன்; உன் கீழான மனமோ அவனுக்கு எதிராக நிற்பது. ஆனால், சகலமுமே அவனுக்குக் கீழ்பட்டவையானபடியால், அவனால் சிருஷ்டிக்கப்பட்ட அந்த கீழான மனமும் அவனுக்குக் கீழ்ப்பட்டதுதான். மனிதனின் மனமோ தானே முடிவுகளை உண்டாக்கிக் கொள்கிறது; அதனால் தவறான நம்பிக்கைகளும், உணர்ச்சிகளும், போக இச்சையும் கிளர்ந் தெழுகின்றன. இந்தக் கீழான மனத்தை நீ எதிர்த்துப் போராடி சத்தியத்தின் பக்கம் சேர்ந்தால் நீ அல்லாஹ்வுக்கு உரியவனாவாய்; 'தன்னை' விட்டும் தப்பியவனாவாய். தாவூத் நபி (அலை) அவர்களிடம் அல்லாஹ் சொன்னான்: "தாவூதே, நான் தடுக்க இயலாத உமது புகலிடமாவேன்; எனக்காக உம கீழான மனதுக்கு அகப்படாதவராக நீர் ஆவதன் மூலம் தான் நீர் உண்மையான சேவைக்கு உரியவராவீர்" என்று.