Sunday, January 27, 2013

அற்புத அகில நாதர்!!!

ஹதீஸ்:عبد الرحمن بن عوف قال : إنّى لفى الصفّ يوم بدرإذ التفتُّ فإذا عن يمينى وعن يسارى فتيان حديثا السنّ. فكأنى لم آمن بمكانهما، إذ قال لى أحدهما سرّاً من صاحبه : يا عمّ أرنى أبا جهل. فقلت : يا ابن أخى وما تصنع به ؟ قال : عاهدت الله إن رأيته أن أقتله أو أموت دونه. فقال لى الآخر سرّاً من صاحبه مثله. قال : فما سرّنى أنى بين رجلين مكانهما، فأشرت لهما إليه، فشدّا عليه مثل الصقرين حتى ضرباه، وهما ابنا عفراء-بخارى 3988 
நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர்.அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள் என்று கூறினார். அப்போது நான் என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவர், அவனை நான் கண்டால் (ஒன்று) அவனை நான் கொலை செய்வேன் அல்லது அதற்காக (ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன் என்றார். அப்போது மற்றொருவரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலாமவரைப் போன்றே கூறினார்.அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் அஃப்ரா வின் இரண்டு புதல்வர்கள் ஆவர். புகாரி 3988.

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-16 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.  

அற்புத அகில நாதர்!!!

 
ஹதீஸ்:ஜாபர் (ரலி) அறிவித்தார்கள்,உம்மு மாலிக் அவர்கள் நாயகம் ( ஸல்) அவர்களுக்கு ஒரு தட்டில் நெய் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார், அவர்களுடைய குழந்தைகள் சாப்பிடுவதற்காக ஏதாவது கேட்கும் போதெல்லாம் எந்த தட்டில் நாயகத்திற்கு நெய் கொடுத்து வந்தாரோ அதில் பார்த்தால் தட்டு நிறைய நெயையை பெற்றுக் கொள்வார்கள், இதே வழக்கமாக இருந்து வந்தது, எதுவரை என்றால் அவர்கள் அந்த தட்டை சுத்தமாக வழித்து எடுக்கும் வரையில். அவர்கள் நாயகத்திடம் சென்று இது பற்றிக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை முழுமையாக துடைத்து எடுத்தீர்களா? என்று வினவினார்கள். ஆம் என்றார். நீங்கள் அவ்வாறு செய்து இருந்திருந்தால் இறுதி வரையில் அது வழங்கிக்கொண்டே இருந்திருக்கும் என்று அருளினார்கள். முஸ்லிம் - 5660. 

 
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-15 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

இராத்திபத்துல் காதிரிய்யா


ஹதீஸ்:عن جابر بن سمرة رضى الله عنه قال : قال رسول الله صلّى الله عليه وسلّم : إنّى لأعرف حجراً بمكة كان يسلّم علىّ قبل أن أبعث، إنّى لأعرفه الآن- مسلم 5653ஜாபிர் இப்னு ஸம்ரா (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் நபியாக அனுப்பப் படுவதற்கு முன்பாகவே மக்காவில் உள்ள ஒரு கல் எனக்கு வழக்கமாக சலாம் உரைப்பதை நான் அறிவேன், இப்பொழுதும் அதை நான் காண்கின்றேன். முஸ்லிம் - 5653 . 





 
 
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் ஜனவரி 24 வியாழக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஆத்ம சகோதரர் துறையூர் சபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

பன்னிரண்டு நாளிதே பதிபிறந்த நாளிதே!!!


அல்குர் ஆன்:நிச்சயமாக அல்லாஹுவும் அவனது மலக்குகளும் நபி(கள் பெருமானார்) மீது ஸலவாத் சொல்கின்றனர். ஓ (ஈமான் கொண்ட) விசுவாசிகளே நீங்களும் நபிமீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வீர்களாக. அல்குர் ஆன் 33 :56

ஹதீஸ்:
உபை இப்னு கஃபு (ரலி) கூறுவதாவது: யா ரசூலல்லாஹ்! நான் உங்கள் மீது அதிகமாக ஸலவாத்துச் சொல்ல விரும்புகிறேன். நான் (துஆக்களுக்காக ஒதுக்கியுள்ள நேரத்தில்) எவ்வளவு அதற்காக ஒதுக்கலாம்? என நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினேன். உமது விருப்பம் போல என்று அன்னார் பதிலளித்தார்கள். கால் பாகத்தை ஒதுக்கட்டுமா? என்றேன். உம் விருப்பம்போல செய்வீர். ஆனால் அதிகப்படுத்துவது உமக்கு நல்லது என்றார்கள். மூன்றில் இரண்டு பாகத்தை ஒதுக்கட்டுமா? என்றேன். உமது விருப்பம்போல செய்வீர். அதனினும் அதிகப்படுத்தினால் உமக்குத்தான் நல்லது என்றார்கள். எனது ஒதுக்கப்பட்ட நேரம் அனைத்தையும் ஸலவாத்துக்கே விட்டு விடட்டுமா? என்றேன். அப்படிச் செய்தால் உமது கவலைகள் அனைத்திற்கும் போதுமானதாக இருக்கும். உமது பாபங்களுக்குப் பரிகாரமான தாகவுமிருக்கும் என்றார்கள்.(திர்மதி, அஹ்மத், ஹாக்கிம்).









 
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதய தினமான ரபீவுள் அவ்வள் பிறை-12 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய்  அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அநேகமான முரீதீன்கள் மற்றும் அஹ்பாப்கள் கலந்து கொண்டு ஈருலக பேறுகளையும் பெற்றனர்.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

முத்திரை நபி!!!



ஹதீஸ்:
عن السائب بن يزيد رضى الله عنه قال : ذهبت بى خالتى إلى رسول الله صلّى الله عليه وسلّم، فقالت : يا رسول الله، إن إبن أختى وجعٌ. فمسح رأسى ودعا لى بالبركة، ثمّ توضأ فشربت من وضوئه، ثمّ قمت خلف ظهره، فنظرت إلى خاتهه بين كتفيه مثل زرّ الحجلة.صحيح مسلم
ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள்,என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை என் தலையில் வைத்து தடவி விட்டார்கள். மேலும் இறைவனின் அருளிற்காக பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளுச் செய்தார்கள், அவர்கள் ஒளுச் செய்த தண்ணீரை நான் குடித்தேன். பிறகு நான் அவர்களுக்கு பின்புறம் நின்று நபித்துவ முத்திரையை அவர்களின் இரண்டு புஜங்களுக்கும் இடையில் பார்த்தேன். அது ஒரு கூடாரத்தின் பொத்தானைப் போல் இருந்தது. ஸஹீஹ் முஸ்லிம்.

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-11 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Tuesday, January 22, 2013

முத்திரை நபி!!!

 பிறை-10
 
 
ஹதீஸ்:عن أنس رضى الله عنه قال : قال رسول الله صلّى الله عليه وسلّم : لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والنّاس أجمعين.صحيح مسلم

அனஸ் (ரலி) அறிவித்தார்கள்,எவர் ஒருவர் அவருடைய பிள்ளை, பெற்றோர் மற்றும் ஏனைய மக்கள் அனைவரையும் விட என்னை நேசம் கொள்கின்றாரோ, அப்பொழுதுதான் அவர் ஈமான் (நம்பிக்கையாளர்) கொண்டவராகின்றார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம்.
 
 
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-10 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
 
நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.



அற்புத அகில நாதர்!!!


ஹதீஸ்:
عن أنس بن مالك رضى الله عنه قال : كان رسول الله صلّى الله عليه وسلّم إذا صلّى الغداة جاء خدم المدينة بآنيتهم فيها الماء، فما يؤتى بإناء إلا غمس يده فيها، فربّما جاؤوه فى الغداة الباردة فيغمس يده فيها. صحيح مسلم.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழக்கம்போல் தங்களுடைய சுப்ஹு தொழுகையை முடித்தவுடன் மதினா வாசிகள் தண்ணீர் நிரப்பிய தங்களுடைய பாத்திரத்தை நபி (ஸல்) முன்னர் வைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட ஒவ்வொரு பாத்திரத்திலும் பரக்கத்திற்காக தம் திருக்கரங்களை தண்ணீரினுள் அமிழ்த்தி எடுப்பார்கள். குளிர்ந்த நீர் உள்ள பாத்திரமாக இருந்தாலும் அதிலே தம் திருக்கரங்களை அமிழ்த்துவார்கள். ஸஹிஹ் முஸ்லிம்.

Sunday, January 20, 2013

முத்திரை நபி!!!

பிறை-8

ஹதீஸ்
عن السائب بن يزيد رضى الله عنه قال : ذهبت بى خالتى إلى رسول الله صلّى الله عليه وسلّم، فقالت : يا رسول الله، إن إبن أختى وجعٌ. فمسح رأسى ودعا لى بالبركة، ثمّ توضأ فشربت من وضوئه، ثمّ قمت خلف ظهره، فنظرت إلى خاتهه بين كتفيه مثل زرّ الحجلة.صحيح مسلم

 
ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள்,என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை என் தலையில் வைத்து தடவி விட்டார்கள். மேலும் இறைவனின் அருளிற்காக பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளுச் செய்தார்கள், அவர்கள் ஒளுச் செய்த தண்ணீரை நான் குடித்தேன். பிறகு நான் அவர்களுக்கு பின்புறம் நின்று நபித்துவ முத்திரையை அவர்களின் இரண்டு புஜங்களுக்கும் இடையில் பார்த்தேன். அது ஒரு கூடாரத்தின் பொத்தானைப் போல் இருந்தது. ஸஹீஹ் முஸ்லிம்.

 

 

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-8 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

எங்கும் நிறைந்த ஏந்தல் நபிகள் (ஸல்)!!!

 
பிறை-7
 
நாயகத்தின் திருப்பார்வை:
ஹதீஸ்
 
حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن أبى الزّناد عن الأعرج عن أبى هريرة أنّ رسول الله صلى الله عليه وسلم قال: (( هل ترون قبلتى هاهنا ؟ فوالله ما يخفى علىّ خشوعكم ولا ركوعكم ، إنّى لأراكم من وراء ظهرى )) بخارى - 418

அபூ ஹுரைராஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் கிப்லா திசையில் மட்டும் பார்க்கின்றேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமல் இருப்பதில்லை. நிச்சயமாக என்னுடைய முதுகுக்குப் பின் புறம் உங்களை நான் பார்க்கிறேன். புஹாரி - 418.
 
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-7 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
 
 

அற்புத அகில நாதர்!!!

 
பிறை-6 



ஹதீஸ்:أنس بن مالك رضى الله عنه أنه قال : رأيت رسول الله صلّى الله عليه وسلّم وحانت صلاة العصر، فالتمس الوضوء فلم يجدوه، فأتى رسول الله صلّى الله عليه وسلّم بوضوء فوضع رسول الله صلّى الله عليه وسلّم يده فى ذلك الإناء فأمر النّاس أن يتوضّئوا منه، فرأيت الماء ينبع من تحت أصابعه، فتوضأ النّاس حتّى توضّئوا من عند آخرهم – بخارى3573

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள், (ஒரு நாள்) நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அப்போது அஸர் தொழுகையின் நேரம் வந்து விட்டுருந்தது. உளூச் செய்யும் தண்ணீரைத் தேடியும் அவர்களுக்கு அது கிடைக்க வில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், உளூச் செய்யும் தண்ணீர் (சிறிது) கொண்டு வரப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அந்தப் பாத்திரத்தில் தம் திருக்கரத்தை வைத்தார்கள் பிறகு, அதிலிருந்து உளூச் செய்யும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் விரல்களுக்குக் கீழேயிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்கி வருவதை கண்டேன். மக்கள் (அதிலிருந்து) உளூச் செய்தார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்களில் கடைசி நபர் வரை (அதிலேயே) உளூச் செய்து முடித்தார்கள். புகாரி - 3573

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-6 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் ஜாபார் அலி யாசினிய்  அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
 

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.



Thursday, January 17, 2013

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

முத்திரை நபி!!!

பிறை-5

ஹதீஸ்

جابر رضى الله عنه قال : أنّ أباه توفّى وعليه دين ، فأتيت النّبىّ صلّى الله عليه وسلّم فقلت : إنّ أبى ترك عليه ديناً، وليس عندى الاّ ما يخرج نخله، ولا يبلغ ما يخرج سنين ما عليه، فانطلق معى لكى لا يفحش علىّ الغرماء، فمشى حول بيدر من بيادر التمر فدعا، ثمّ آخر، ثمّ جلس عليه فقال : انزعوه ، فأوفاهم الذى لهم، وبقى مثل ما أعطاهم – بخارى 3580

 
ஜாபிர் (ரலி) அறிவித்தார்கள், என் தந்தை, தம் மீது கடனிருக்கும் நிலையில் இறந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் தந்தை தம் மீது கடனை (அடைக்காமல்) அப்படியேவிட்டுச் சென்றார். என்னிடம் அவரின் பேரிச்ச மரங்களின் விளைச்சலைத் தவிர வேறெதுவும் இல்லை. அந்தப் பேரிச்ச மரங்களின் பல ஆண்டுகளின் விளைச்சல் கூட அவரின் மீதுள்ள கடனை அடைக்கும் அளவிற்கு எட்டாது. எனவே, கடன்காரர்கள் என்னைக் கடும் சொற்களைப் பயன்படுத்தி ஏசாமளிருப்பதற்காக நீங்கள் என்னுடன் வாருங்கள் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் (என்னுடன் வந்து) பேரிச்சம் பழங்களைச் சேமித்துக் காய வைக்கும் களங்களில் ஒன்றைச் சுற்றி நடந்து (பரக்கத் எனும் அருள்வளம் வேண்டி) பிரார்த்திதார்கள். பிறகு மற்றொரு களத்தையும் சுற்றி நடந்தார்கள். (பிறகு அருள்வளம் வேண்டி பிரார்த்திதார்கள்) பிறகு அதன் அருகில் அமர்ந்து கொண்டு, அதை வெளியே எடுங்கள் என்று கூறினார்கள். கடன்காரர்களுக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடுத்தார்கள். அவர்களுக்கு கொடுத்த அதே அளவுக்கு அது மீதமாகி விட்டது. புகாரி - 3580.


குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-5 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.


நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Wednesday, January 16, 2013

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்


முத்திரை நபி!!!



பிறை-4

ஹதீஸ்:عن أنس بن مالك رضى الله عنه قال : كان رسول الله صلّى الله عليه وسلّم يدخل بيت أمّ سليم فينام على فراشها، وليست فيه. قال : فجاء ذات يوم فنام على فراشها فأتيت، فقيل لها : هذا النّبى صلّى الله عليه وسلّم نام في بيتك على فراشك، قال : فجاءت وقد عرق واستنقع عرقه على قطعة أديم على الفراش، ففتحت عتيدتها فجعلت تنشف ذلك العرق فتعصره فى قواريرها، ففزع النّبى صلّى الله عليه وسلّم ، فقال : ما تصنعين نا أمّ سليم؟ فقالت : يا رسول الله، نرجو بركته لصبياننا. قال : أصبت-مسلم - 5762.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் அவர்களின் வீட்டிற்க்கு வந்து அவர்களுக்கு என்று விரித்து வைக்கப்பட்ட விரிப்பில் ஒய்வு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள், வழக்கம் போல் ஒரு நாள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் வந்து அந்த விரிப்பில் படுத்து ஒய்வு எடுத்தார்கள். உம்மு சுலைம் அவர்கள் வீட்டிற்க்கு திரும்பியதும் நபி (ஸல்) அவர்கள் ஒய்வு எடுப்பது அறிவிக்கப் பட்டது. அவர்கள் சென்று பார்த்த பொழுது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கடுமையான வியர்வை ஏற்பட்டிருந்தது, அதனால் கீழே விரிக்கப்பட்டிருந்த விரிப்பு முழுவதும் நனைந்து காணப்பட்டது. உடனே அந்த அம்மையார் ஒரு காலியான பாட்டிலை எடுத்துக்கொண்டு அந்த துணியைப் பிழிந்து அந்தப் புனிதமான வியர்வையை காலியான பாட்டிலில் நிரப்பிக் கொண்டிருந்தார். நாயகம் (ஸல்) அவர்கள் திடுக்கிட்டு விழித்து அந்தப் பெண்மணியிடம், என்ன செய்கின்றீர் உம்மு சுலைமே? என்று வினவினார்கள். அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர் அவர்களே! இந்த வியர்வையினுடைய அபிவிருத்தி (பரக்கத்) எங்களுடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். நபி (ஸல்) அவர்கள் நீ சரியாகக் கூறினாய் என்று கூறினார்கள். முஸ்லிம் - 5762 .
 
 



குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-4 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.





கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

முத்திரை நபி!!!
பிறை-3
 
ஹதீஸ்:عن أنس بن مالك رضى الله عنه قال : كان رسول الله صلّى الله عليه وسلّم إذا صلّى الغداة جاء خدم المدينة بآنيتهم فيها الماء، فما يؤتى بإناء إلا غمس يده فيها، فربّما جاؤوه فى الغداة الباردة فيغمس يده فيها. صحيح مسلم.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழக்கம்போல் தங்களுடைய சுப்ஹு தொழுகையை முடித்தவுடன் மதினா வாசிகள் தண்ணீர் நிரப்பிய தங்களுடைய பாத்திரத்தை நபி (ஸல்) முன்னர் வைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட ஒவ்வொரு பாத்திரத்திலும் பரக்கத்திற்காக தம் திருக்கரங்களை தண்ணீரினுள் அமிழ்த்தி எடுப்பார்கள். குளிர்ந்த நீர் உள்ள பாத்திரமாக இருந்தாலும் அதிலே தம் திருக்கரங்களை அமிழ்த்துவார்கள். ஸஹிஹ் முஸ்லிம்.

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-3 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப்  ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்


முத்திரை நபி!!!
பிறை-2


ஹதீஸ்:عن السائب بن يزيد رضى الله عنه قال : ذهبت بى خالتى إلى رسول الله صلّى الله عليه وسلّم، فقالت : يا رسول الله، إن إبن أختى وجعٌ. فمسح رأسى ودعا لى بالبركة، ثمّ توضأ فشربت من وضوئه، ثمّ قمت خلف ظهره، فنظرت إلى خاتهه بين كتفيه مثل زرّ الحجلة.صحيح مسلمஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள்,என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை என் தலையில் வைத்து தடவி விட்டார்கள். மேலும் இறைவனின் அருளிற்காக பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளுச் செய்தார்கள், அவர்கள் ஒளுச் செய்த தண்ணீரை நான் குடித்தேன். பிறகு நான் அவர்களுக்கு பின்புறம் நின்று நபித்துவ முத்திரையை அவர்களின் இரண்டு புஜங்களுக்கும் இடையில் பார்த்தேன். அது ஒரு கூடாரத்தின் பொத்தானைப் போல் இருந்தது. ஸஹீஹ் முஸ்லிம்.


குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-2 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் ஆத்ம சகோதரர் துறையூர் சபியுல்லாஹ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்


முத்திரை நபி!!!
பிறை-1
 
தினமும் ஒரு ஹதீஸ்:ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அறிவித்தார்கள்,இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மத் - புகழப்பட்டவர் ஆவேன், நான் அஹ்மத் - இறைவனை அதிகம் புகழ்பவராவேன், நான் மாஹு - அழிப்பவர் ஆவேன் (என் மூலமாக இறைவன் இறைமறுப்பை அழிக்கிறான்), நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவராவேன் (மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள்), நான் ஆம்ப் - (இறைத்தூதர்களில்)இறுதியானவராவேன். (புஹாரி - 3532).
 
 
 
 
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-1 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.