Wednesday, December 24, 2014

அற்புத அகில நாதர்!!!


ஹதீஸ்:

عن أنس بن مالك رضى الله عنه قال : كان رسول الله صلّى الله عليه وسلّم إذا صلّى الغداة جاء خدم المدينة بآنيتهم فيها الماء، فما يؤتى بإناء إلا غمس يده فيها، فربّما جاؤوه فى الغداة الباردة فيغمس يده فيها. صحيح مسلم.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழக்கம்போல் தங்களுடைய சுப்ஹு தொழுகையை முடித்தவுடன் மதினா வாசிகள் தண்ணீர் நிரப்பிய தங்களுடைய பாத்திரத்தை நபி (ஸல்) முன்னர் வைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு முன் வைக்கப்பட்ட ஒவ்வொரு பாத்திரத்திலும் பரக்கத்திற்காக தம் திருக்கரங்களை தண்ணீரினுள் அமிழ்த்தி எடுப்பார்கள். குளிர்ந்த நீர் உள்ள பாத்திரமாக இருந்தாலும் அதிலே தம் திருக்கரங்களை அமிழ்த்துவார்கள். ஸஹிஹ் முஸ்லிம்.


குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-2முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது  நடைபெற்றது. 

முத்திரை நபி!!!




ஹதீஸ்:

عن السائب بن يزيد رضى الله عنه قال : ذهبت بى خالتى إلى رسول الله صلّى الله عليه وسلّم، فقالت : يا رسول الله، إن إبن أختى وجعٌ. فمسح رأسى ودعا لى بالبركة، ثمّ توضأ فشربت من وضوئه، ثمّ قمت خلف ظهره، فنظرت إلى خاتهه بين كتفيه مثل زرّ الحجلة.صحيح مسلم

ஸைப் இப்னு யஜித் (ரலி) அறிவித்தார்கள், என்னுடைய சிறிய தாய் என்னை அழைத்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சென்று கூறினார்கள்: நபிகள் பெருமானே! என்னுடைய சகோதரியின் மகனான இவனுக்கு காலில் நோவு உள்ளது. ஆகையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் திருக் கரத்தினை என் தலையில் வைத்து தடவி விட்டார்கள். மேலும் இறைவனின் அருளிற்காக பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒளுச் செய்தார்கள், அவர்கள் ஒளுச் செய்த தண்ணீரை நான் குடித்தேன். பிறகு நான் அவர்களுக்கு பின்புறம் நின்று நபித்துவ முத்திரையை அவர்களின் இரண்டு புஜங்களுக்கும் இடையில் பார்த்தேன். அது ஒரு கூடாரத்தின் பொத்தானைப் போல் இருந்தது. ஸஹீஹ் முஸ்லிம்.


குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை-1 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப்  நடைபெற்றது. 






நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Sunday, December 7, 2014

இராத்திபத்துல் காதிரிய்யா





குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் டிசம்பர்  4  மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் P.T.M.அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.







கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது