வெலிகமையில் கந்தூரித் திருவிழா 19/02/2011
சங்கைமிகு அஸ்சையது கலீல் அவுன் மௌலானா அவர்களின் திரு இல்லத்தில் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புகழ் பாமாலையான வித்ரியாவும், சுப்ஹான மௌலூதும் 19/02/2011 காலை 10.00 மணிக்கு வெலிகமை நகர மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகச்சிறப்புடன் ஓதினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு காயல் அப்துல்காதிரி மஹ்ழரி ஆலிம் அவர்களும் மற்றும் சென்னை ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஆலிம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.