Monday, February 14, 2011

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

தினமும் ஒரு ஹதீஸ்:

أبو هريرة رضى الله عنه يقول : قال النّبيّ صلّى الله عليه وسلّم "إذا وقع الذّباب فى شراب أحدكم فليغمسه ثمّ لينزعه ، فإنّ فى إحدى جناحيه داءً والأخرى شفاءً – بخارى 3320

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களுடைய எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்தட்டும் பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். புஹாரி - 3320.



குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ரபீவுள் அவ்வள் பிறையை முன்னிட்டு நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மௌலிது ஷரீப் (பிறை 11) ஆத்ம சகோதரர் அப்துல் அஜீஸ் உலவி அவர்களின் சார்பாக ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.