Sunday, February 13, 2011

கண்மணி நாயகத்தின் கனிவான மாதம்

தினமும் ஒரு ஹதீஸ்:

عن عائشة رضى الله عنها قالت : أنّ النّبىّ صلّىالله عليه وسلّم كان يحدّث حديثاً لو عدّه العادّ لأحصاه – بخاري 3567

ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்,

நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாக கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்).(புஹாரி - 3567).



குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ரபீவுள் அவ்வள் பிறையை முன்னிட்டு நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மௌலிது ஷரீப் (பிறை 10) சகோதரர் ஜமால் அவர்களின் சார்பாக ஆத்ம சகோதரர் முஹம்மத் ஹாஷிம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.