Saturday, March 12, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : ومن وقف على الرخص ولم يتقدم إلى العزيمة إن سلب عنه التوفيق فقطعت عنه أمداده فغلب الهوى عليه وشهوات النفس، فتناول الحرام خرج من الشرع، فصار في زمرة الشياطين أعداء الله عزَّ وجلَّ الضالين عن سبل الهدى، فإن أدركته المنية قبل التوبة كان من الهالكين إلا أن يتغمده الله تعالى برحمته وفضله، فالخطر في القيام مع الرخص، والسلامة كل السلامة مع العزيمة.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: தன் கடமையான காரியங்களையும் செய்யாது ஆரம்பத்திலேயே ஓய்வடைந்தவனாய் இருப்பவனோ, அவனுக்குத் தரப்பட்ட பாக்கியங்கள் பறிக்கப்பட்டதும், அல்லாஹ்வின் உதவியிலிருந்தும் துண்டிக்கப் பட்டவனாவான். கீழான ஆசைகளும் மிருக இச்சைகளும் அவனை ஆட்கொள்ளும்; சன்மார்க்க நெறி முறைக்கு முரணாக நடப்பான்; அல்லாஹ்வின் பகைவர்களான ஷைத்தான்கள் கூட்டத்தில் சேருவான். நேர்மையான பாதையை விட்டு வெகு தூரம் விலகிப் போவான். இந்த நிலையில் வருத்தப்பட்டு திருந்துமுன் அவன் இறந்தால் அல்லாஹ் தன் கருணையால் அவனை மறைத்தாலன்றி, அவன் அழிந்துபட்டவர்கள் கூட்டத்தில் சேர்ந்தவனேயாவான். எனவே ஓய்வாக இருப்பதால்தான் சகல ஆபத்துக்களும் உண்டாகின்றன; கடமையான காரியங்களைச் செய்வதில்தான் பாதுகாப்பு உண்டு என்பதை உணர்ந்துகொள்.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 7) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.