Monday, March 14, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : وإذا تركت النفس بطلب شهوة من شهواتها ولذة من لذاتها من القلب فأجابها القلب إلى مطلوبها ذلك من غير أمر من الله تعالى وإذن منه حصلت بذلك غفلة عن الحق تعالى وشرك ومعصية، فعمهما الله تعالى بالخذلان والبلايا وتسليط الخلق،والأوجاع والأمراض والإيذاء والتشويش، فينال كل واحد من القلب والنفس حظ..

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: மனிதனிடமுள்ள கீழான மனம் இச்சைக்கும் போகத்துக்கும் உரிய எந்த ஒரு பொருளையும் தேடும்படி இதயத்தைத் தூண்டி, இதயமும் அதற்கு இணங்கி அல்லாஹ்வின் கட்டளையோ அனுமதியோ இன்றி அதில் ஈடுபடுமாயின், அதன் பயனாய் அல்லாஹ்வை மறப்பதும், இணைவைத்தலும், மற்றப் பாவங்களும் வந்து சேருகின்றன. இத்தகைய இதயத்துக்கு அவமானமும், துயரங்களும், ஜனங்களுக்கு அடிமைப்படும் தன்மையும், புண்படுத்தலும், ஆவலும், வேதனையும், நோயும் உண்டாகும்படி அல்லாஹ் செய்து விடுகிறான்.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 9) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.