Tuesday, March 15, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : ليس الشرك عبادة الأصنام فحسب, بل هو متابعتك هواك، وأن تختار مع ربك شيئاً سواه من الدنيا وما فيها والآخرة وما فيها, فما سواه عزَّ وجلَّ غيره، فإذا كنت إلى غيره فقد أشركت به عزَّ وجلَّ غيره, فاحذر ولا تركن, وخف ولا تأمن, وفتش فلا تغفل فتطمئن, ولا تضف إلى نفسك حالاً ومقاماً.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: இணைவைப்பது என்பது விக்ரஹ வணக்கம் மட்டுமன்று; உடல் இச்சையின்படி நடப்பதும், இம்மை மற்றும் மறுமைக்குரிய எதையும் அல்லாஹ்வோடு சேர்த்துப் பேசுதலும் கூட இணைவைப்பதுதான். ஏனெனில், அல்லாஹ்வை அன்றி வேறு எதுவும் அல்லாஹ் ஆகாது. அவனை அல்லாத எதிலும் நீ ஈடுபட்டிருக்கும்போது, நீ அந்தப் பொருளை அவனோடு இணைவைப்பவனாகிறாய் என்பதில் ஐயமில்லை. எனவே, எச்சரிக்கையாய் இரு; அயர்ந்து விடாதே! அஞ்சு; பாதுகாப்பு உணர்ச்சியுடன் இருந்து விடாதே! தேடு; அலட்சிய பாவத்தோடு இருந்து விடாதே! அப்படியானால்தான் நீ பாதுகாப்புப் பெற முடியும். உனது எந்த நிலையும் அந்தஸ்தும் உன் கீழான மனத்தின் காரணமாக உண்டானது என்று கூறாதே!.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 10) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.