Wednesday, March 16, 2011

முஹிய்யுத்தீன் மவ்லிது!!!

المقالة:

قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : ما أعظم تسخطك على ربّك و تهمتك له عزَّ وجلَّ، و اعتراضك عليه و انتسابك له عزَّ وجلَّ بالظلم، واستبطائك في الرزق والغنى وكشف الكروب والبلوى، أما تعلم أن لكل أجل كتاب، ولكل زيادة بلية وكربة غاية منتهى ونفاد، لا يتقدم ذلك ولا يتأخر، أوقات البلايا لا تقلب فتصير عوافى ووقت البؤس لا ينقلب نعيما، وحالة الفقر لا تستحيل غنى. أحسن الأدب وألزم الصمت والصبر والرضا والموافقة لربك عزَّ وجلَّ، وتب عن تسخطك عليه وتهمتك له في فعله.

உபதேசம்:

அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: உன் இறைவனிடம் நீ கோபம் கொள்வதும், அவன் மீது குறை கூறுவதும், அவனை நிந்திப்பதும், அவன் நீதியோடு நடக்கவில்லை, உணவு அளிப்பதிலும் துயர்களை நீக்குவதிலும் தாமதம் செய்கிறான் என்று பழிப்பதும் விசித்திரமாய் இல்லையா? ஒவ்வொரு சம்பவத்துக்கும் உரிய நேரம் ஒன்று உண்டு. ஒவ்வொரு துயரத்துக்கும் படவேண்டிய கால அவகாசம் ஒன்று உண்டு என்று நீ அறிவாயா! இவற்றை முந்தவோ பிந்தவோ முடியாது.துயரம் அனுபவிக்க வேண்டிய காலம் சுகம் அனுபவிப்பதற்கு உரியதாகவும் கஷ்டமான நேரம் வசதியானதாகவும் ஆகாது. உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடி. மௌனமாகவும் பொறுமையாகவும், மனப்பூர்வமான பணிவோடும் உன் இறைவனின் போக்கை அறிந்து தன்மையோடும் இருந்துவா! அல்லாஹ்விடம் கோபம் கொண்டதற்காகவும் அவன் செயல் குறித்து அவன் மீது குறை கூறியதற்காகவும் பாவமீட்சி தேடிக்கொள்!.

குதுபு நாயகம் அவர்கள் மீது இயற்றப் பட்ட முஹிய்யுத்தீன் மவ்லிது ஷரீப் (பிறை 11) ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் அவர்களின் இல்லத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.