குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் நபிகள் கோமான் (ஸல்) அவர்களின் மீலாது விழா வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு தொடங்கியது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் சுப்ஹான மவ்லித் ஓதப்பட்டது.
விழாவினை கிராத் ஓதி துவங்கி வைக்கின்றார் ஆத்ம சகோதரர் பெரம்பலூர் G. சம்சுதீன் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
அதற்கடுத்தபடியாக ஏகந்தப் பாடல் மற்றும் வஹ்ததுல் வுஜூது பைதினை ஆத்ம சகோதரர் தலைவர் அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி (பாகவி) அவர்களும் மற்றும் ஆத்ம சகோதரர் M. முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி அவர்களும் மிக அழகாய் பாடினார்கள்.
அடுத்ததாக நபிப்புகழ் பாவினை குவைத் சபையின் பிரதான பாடகர் M. முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி இனிமையாக பாடினார்.
விழாத்தலைவர் முன்னுரை:
முதல் அமர்வில் பேச்சாளர்களின் வரிசையில் முறையே ஆத்ம சகோதரர்கள் விஜயகோபாலபுரம் நத்ஹர்ஷா, பெரம்பலூர் முஹம்மது, சென்னை முஹம்மது ஹாஷிம், மன்னார்குடி ஹிதாயத்துல்லாஹ் மற்றும் விஜயகோபாலபுரம் முபாரக் அலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து மக்ரிப் தொழுகைக்குப் பின் ரபீஉல் ஆகிர் பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் சிறப்பாக நடைபெற்றது.
மீலாது விழா தொடர்ச்சியின் இரண்டாம் அமர்வில் முறையே ஆத்ம சகோதரர்கள் பெரம்பலூர் அமானுல்லாஹ், எசனை அப்துல் அஜீஸ் உலவி, ஆலிம் அமீர் பாட்சா மற்றும் திருச்சி முஹம்மது மீரான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
நன்றி உரை சபையின் ஆலோசகர் ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
நிகழ்ச்சியின் இறுதியாக யா நபியல்லாஹ் பைத் ஓதப்பட்டது.
இவ்வைபவத்தில் அனைத்து முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்கள் கலந்து சிறப்பித்து ஈருலகப் பேற்றையும் பெற்றனர். கலந்து கொண்டவர்களுக்கு தப்ரூக் மற்றும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது. இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஆத்ம சகோதரர் P.T.M. அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்களுடைய இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.