Friday, March 18, 2011

முஹிய்யுத்தீன் ஆண்டகையின் உபதேசம்!!!

المقالة: قـال رضـي الله تـعـالى عـنـه و أرضـاه : إذا فني العبد عن الخلق و الهوى و النفس و الإرادة و الأماني دنيا و أخرى و لم يرد إلا الله عز و جل و خرج الكل عن قلبه وصل إلى الحق، و اصطفاه و اجتباه، و أحبه و حببه إلى خلقه، و جعله يحبه و يحب قربه، و يتنعم بفضله و يتقلب في نعمه و فتح عليه أبواب رحمته، و وعده أن لا يغلقها عنه أبداً

உபதேசம்: அப்துல் காதிர் ஜீலானி (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியான் சிருஷ்டிகளை விட்டும் இச்சையை விட்டும், தன் கீழான மனத்தை விட்டும், நோக்கத்தையும், இம்மை மறுமையின் ஆசைகளையும் விட்டும் மறைந்ததும், அவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் நாடமாட்டான். சகலமும் அவன் மனத்தைவிட்டு மறைந்துவிடுகின்றன. இதன் பின்னரே தன்னை பொறுக்கியெடுக்கும், அன்பு பாராட்டும், தன் மீது சிருஷ்டிகள் யாவும் அன்பு செலுத்தும்படி செய்யும் அல்லாஹ்வின் சமீபத்துவத்தையும் பெற்று அதில் புரளுகிறான். அல்லாஹ் தன் கருணைக் கதவுகளை அவனுக்குத் திறந்து விடுகிறான், அதை மீண்டும் ஒருக்காலும் அடைப்பதில்லை என்றும் வாக்களிக்கிறான்.